புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

கேரள 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது!

கேரளாவில் 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காபி ஷாப் ஒன்றில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து கேரளா முழுவதும் கல்லூரிகளில் ஒருவரை ஒருவர் முத்தமிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  'முத்தமிடுவது ஆபாசமில்லை' என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. முத்தமிடும் போராட்டத்துக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு காட்டி வந்தனர். 

இந்நிலையில், கேரளாவில் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கேரள 'கிஸ் ஆப் லவ் ' இயக்கத்தின் அமைப்பாளர்கள் ராகுல் பசுபாலன், அவரது மனைவி ரேஷ்மி நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'கொச்சு சுந்தரிகள்' என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி,  அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்பி வைத்ததாகவும், கேரளா முழுவதுமே இவர்கள் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் போலீஸார் தரப்பு தகவல்கள் கூறுகின்றனர். 

இதையடுத்து கேரள சைபர் கிரைம் போலீசார் நேற்று கொச்சியில்  ராகுல் மற்றும் ரேஷ்மியை கைது செய்தனர். அவர்களுடன் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மைனர் ஆவார். ரேஷ்மி கைது செய்யப்படும்போது அவர் போலீசார் மீது காரை ஏற்ற முயற்சித்தாகவும் கூறப்படுகிறது. கைது நடவடிக்கையின் போது ஒரு காரில் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் தப்பி ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இவர்கள் தவிர, காசர்கோட்டை சேர்ந்த  கூலிப்படைத் தலைவன் அக்பர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
'கிஸ் ஆப் லவ் ' இயக்கத்தினர் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ad

ad