புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

ரசியல் கைதிகளுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீராகாரம் வழங்கினர்.

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாட்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து,
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று (17.11.2015) காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நீராகாரம் வழங்கினர்.
தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

ad

ad