பிரியங்கர ஜயரட்ன இன்று உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல்கள் தெரிவிகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.