புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வுப் பிரிவாக மாற்றம்,,தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்


தற்போது இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வு பிரிவாக மாறியுள்ளதாக தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் எக்னெலிகொடவை கடத்தியதாக தெரிவித்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோத்தபாயராஜபக்ஸ ஆகியோரை கைது செய்ய தயாராகி வருவதாக
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னதாக ஐந்து இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் 2003ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுப்பை போன்று இந்த சம்பவம் அமைவதாகவும், புலனாய்வு பிரிவின் தலைவர் ஷானி அபேசேகர தனக்கான புள்ளிகளை அதிகரித்து கொள்வதற்காக 5 இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் ஒருவரிடம் வாக்கு மூலம் அளிக்குமாறு புலனாய்வு பிரிவின் தலைவர் ஷா

ad

ad