கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதாக நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கு சல்மான்கானை விடுவித்தது நீதிமன்றம்.
2002ம் ஆண்டு மதுபோதையில் காரை ஏற்றி, நடைபாதையில் படுத்திருத்தவரை கொன்றதாக சல்மான்கான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.