புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

காமக் கொடூரனின் நாக்கை பதம் பார்த்த மாணவி

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு
முயன்ற ஒருவரின் நாக்கை மாணவி ஒருவர் துண்டாடியுள்ளார்.
குறித்த சம்பவம் மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாக்கின் ஒரு துண்டை கடித்தெடுத்த குறித்த மாணவி, பெற்றோருடன் நாக்குத் துண்டை எடுத்துக் கொண்டு சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதனடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார், நாக்கின் ஒருதுண்டை இழந்த நபரை இன்னும் கண்டறிய முடிவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த நாக்குத் துண்டை வைத்தியாலையில் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ad

ad