ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, மகிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில் ஒன்று கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம, மகிந்த யாப்பா அபேவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, பவித்திரா வன்னியாராட்சி ,விதுர விக்கிரமநாயக்க, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 40 ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மேதின நிகழ்வில் பங்கு பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.