புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2019

நோன்பாளிக்கு நாறிய கோழிக்கறி வழங்கிய லக்கிஹோட்டல்- யாழில் சம்பவம்

நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இன்று(9) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்துசந்தி பகுதியில் உள்ள லக்கி ஹோட்டல் என்கிற உணவகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவரால் உரிமையாளரிடம் ( வவுனியாவை சேர்ந்த இஸ்லாமியர் ) தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு பணம் அறவிட்டு பல்கலை மாணவனை நாளை வருமாறு உரிமையாளர் திருப்பி அனுப்பியுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்,தரமற்ற உணவு விற்பனை விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் புதிய,பழைய உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக சுகாதார விடயங்களில் அக்கறை காட்டிக்கொண்டு பின்னர் அவற்றை மீறி நடக்கின்றனர்.

ad

ad