புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2019

வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தெரிவு

டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

நாடாளுமன்ற மேல் சபையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்திகதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

6 நாடாளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியிடுகிறார். இவர்கள் 3 பேரும் நாளை மனுத்தாக்கல் செய்கின்றனர்.

தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் பரிசீலனை 9-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11-ந்திகதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அ.தி.மு.க. - தி.மு.க. வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். சுயேட்சைகளின் மனுக்கள் 9-ந்திகதி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்

ad

ad