புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2019

த்துவராத முன்னணியை விலக்கி மாற்று அணியை உருவாக்க வேண்டும்! - சுரேஷ்

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஒரு மாற்று அணி தமிழ் மக்களுக்கு தேவை என்பதுடன், அந்த அணி ஓரிரு கட்சிகள் அல்லாது தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பலமான அணியாக உருவாக்கப்பட வேண்டும். கொள்கை வழியில், இதனுடன் இணையக் கூடிய சகல தரப்புக்களும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடியவாறு ஒன்றிணைய வேண்டும்.

மிக நீண்ட கலந்துரையாடல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பல தரப்புக்களும் நடத்தியிருக்கின்றன. எனினும், பேச்சுக்களின் மூலம் ஒத்துவராதவர்களை விடுத்து, ஏனைய அனைத்து தரப்பினரும் இணைந்து பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ad

ad