புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2020

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று (17) நடைபெறவுள்ளது.இந்த கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.

இது வாரத்தின் இறுதி சந்திப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க அததெரணவிடம் தெரிவித்தார்.

இதில் தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேபோல் சஜித் பிரேமதாச தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி தொடர்பில் கட்சியின் செயற்குழுவை தெளிவுபடுத்தவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.

அனைத்து சர்சைகளுக்கும் தற்போது முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர் சின்னம் தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

ad

ad