புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

www.pungudutivuswiss.com
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரான பிரபல பேராசிரியர் றொகான் குணரட்ணா கருத்து வெளியிட்டுள்ளார்.


ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாயிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவிய ரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.


சிவப்பு மஞ்சட் கொடிகளைப் பயன்படுத்துவதையோ, புலிச் சின்னங்களையோ தொடர்புபட்ட குறியீடுகளையோ பகிரங்க வெளியில் பயன்படுத்தவோ அனுமதிக்கலாகாதென்றும் குணரட்னா சண்டே ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.


அமெரிக்க இராணுவ மையங்களாலும் ஊடகங்களாலும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணராகக் கையாளப்படுபவர். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களில் ஆய்வாளராகக் கடமையாற்றியவர். "அல்குவைடா அமைப்புக்கு உள்ளே" என்ற நூல் உட்பட பல நூல்களைத் தயாரித்தவர் குணரட்ணா.


இவர் தற்போதைய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நெருங்கிய ஆலோசகராகவும் இருந்துவருகிறார்.

ad

ad