புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்

இடம்பெயர்ந்துள்ளன

கடும் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ள மரங்கள் முறிந்துள்ளன.கூரை விழுந்ததன் காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

37 குடும்பங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தில் இரத்தினசாமி சாந்தரூபான் (வயது-30) என்பவர் காயமடைந்து பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பீற்றர் மகிந்தன் (வயது -35) என்பவர் ஊரணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவர்கள் இருவரும் ஊரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

ad

ad