புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2024

வவுனியாவில் வாடகை வீட்டில் பாலியல் விடுதி!

www.pungudutivuswiss.com


வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

செப்ரெம்பர் 21இல் ஜனாதிபதி தேர்தல்?

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும்,  உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது

கிளப் வசந்த கொலைக்கு உதவிய இளம் யுவதி கைது!

www.pungudutivuswiss.com


கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

நாளை முதல் போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்!

www.pungudutivuswiss.com


சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்

குத்துவிளக்கு கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை  கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

வழக்கினை கைவாங்குவதாக முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம்!

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம் என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம் என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு 
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

www.pungudutivuswiss.com
க்க விமான நிலையத்தில் கைது!
[Sunday 2024-07-21 17:00]


தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று  காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

19 ஜூலை, 2024

"போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்" - பராக் ஒபாமா வெளிப்படை

www.pungudutivuswiss.com

2024 தேர்தலை எதிர்கொள்ள ஜோ பைடனின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள ஒபாமா, அவரது திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறைக்குள் தள்ளுவேன் என ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வாக்குறுதியை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகிறது அரசு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

பலத்தைக் காட்டவே பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

நண்பியின் துரோகத்தால் உயிரை மாய்த்த பெண்!

www.pungudutivuswiss.com


தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 
யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்!

www.pungudutivuswiss.com


உயர்தர மாணவர்களுக்கு  கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது,  உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்   எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.

உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்

17 ஜூலை, 2024

வகுப்பெடுக்கப் போன விரிவுரையாளர் குளியல் காட்சியை வீடியோ எடுத்து மாட்டினார்!

www.pungudutivuswiss.com

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அவரே பதில் வைத்திய அத்தியட்சகர் என்கிறார் சுகாதார அமைச்சர்!

www.pungudutivuswiss.com


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தா

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்- மீண்டும் குழப்பம்!

www.pungudutivuswiss.com
ரம்- மீண்டும் குழப்பம்!
[Wednesday 2024-07-17 17:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை  நாடவுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகினார்

www.pungudutivuswiss.com

பிரான்சில் அவசர அவசரமாக உருவான புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்

www.pungudutivuswiss.com

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்

ad

ad