![]() அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் |
-
5 பிப்., 2025
அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி- ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் இரகசிய டீல்! [Wednesday 2025-02-05 05:00]
3 பிப்., 2025
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி! [Saturday 2025-02-01 16:00]
![]() கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்த கனடா! [Sunday 2025-02-02 17:00]
![]() அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கு பதிலடியாக இவ்வாறு கனடாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பான வகைகள் தளபாடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்! Top News [Sunday 2025-02-02 17:00]
![]() தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது |
31 ஜன., 2025
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர
அனுராவுக்கு முன்னால் தனது சொந்தப் பிரச்சனை பற்றி பிரசங்கம் நடத்திய அர்ச்சுணா MP
மதுபோதையில் கடைக்குள் அட்டகாசம்- மதகுரு கைது! [Friday 2025-01-31 05:00]
![]() வவுனியா, ரயில் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். |
கோண்டாவிலில் பாலியல் தொழில் - 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் கைது! [Friday 2025-01-31 05:00]
![]() யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் |
ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் |
அனுரவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
30 ஜன., 2025
மாவை சேனாதிராஜா
Senathirajah, அக்டோபர் 27, 1942 - என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
தனது 82வது வயதில் 2025 சனவரி 29 இல் காலமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
அரசியலில்
[தொகு]சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]
2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12][13][14]
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[15]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி / மாவட்டம் | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 2,820 | தெரிவு செய்யப்படவில்லை |
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 10,965 | தெரிவு |
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 33,831 | தெரிவு |
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 38,783 | தெரிவு |
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,501 | தெரிவு |
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 58,782 | தெரிவு |
2020 நாடாளுமன்றத் தேர்தல் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,358 | தெரிவு செய்யப்படவில்லை |
வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 82 ஆவது வயதில் 2025 சனவரி 29 திகதி இரவு உயிரிழந்தார்
ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
29 ஜன., 2025
டென்மார்க் $2.1 பில்லியன் ஆர்க்டிக் ராணுவ திட்டத்தை டொனால்ட் ட்ரம்பிற்கு பதிலளிக்க அறிவிக்கிறது
28 ஜன., 2025
யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்
25 ஜன., 2025
கிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கைது
பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மஹிந்த! [Friday 2025-01-24 19:00]
![]() தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார் |
23 ஜன., 2025
இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு- வெள்ளத்தில் கிராமங்கள்! [Thursday 2025-01-23 05:00]
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது.அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. |
லோச்சனாவினால் தப்பிய அர்ச்சுனா!
![]() அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் தான் சந்தேக நபர் என்று கூறி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில், புதன்கிழமை ஆஜரானார். |
சந்திப்பில் பங்கேற்காது தமிழரசு- கஜேந்திரகுமாருக்கு அறிவித்தார் சிறிதரன்! [Thursday 2025-01-23 05:00]
![]() தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன |