இதே வேளை இரணைமடு குளம் வான்பாய்ந்து வருவதுடன், குளத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் உள்ளிட்ட நீர்பாசனக் குளங்களும் வான்பாய்ந்து வருகிறது. இதனால் வெளியேறும் வெள்ள நீரும் மக்கள் குடியிருப்புக்கள், உள்ளக வீதிகளை கடந்து செல்கின்றது. வெள்ளம் வடிந்தோடும் நிலையில் கண்டாவளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும், குளங்களை பார்வையிடும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது. |