புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக நிகழ்வு ஒளி பரப்பு நாளைய தினம்  30.06.2013 அன்றுஐரோப்பிய நேரம்  இரவு 10 மணிக்குடான் யாழ் ஒளி  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் என்பதை அறிய தருகிறோம் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர்தான். 

அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர். தன்னை சந்தித்த பத்திரிகையாளரிடம், "சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினார். 

சினிமா ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். 

அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார். 

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். 

அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. 

நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப்போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். 

அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன். 

ஆடி அடங்கி விட்ட நிஷா பலரால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம், காலம் ஒரு மோசமான வாத்தியார், அது அடித்து சொல்லி கொடுக்கும், முட்டி போட வைத்து கதறடிக்கும். குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். அதற்க்கு நடிகைகள் கூட விலக்கில்லை. பார்த்தோ, படித்தோ திருந்தி கொள்வது நல்லது.
நடிகை நிசாவின் சோகம்.எயிட்சொடு போராடும் அல்லல் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா.
விஜயகாந்த் நன்றியுடன் நடந்திருந்தால் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் :
அமைச்சர் கே.வி.இராமலிங்கம்

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் தற்காலிக நீக்கம் : விஜயகாந்த் அதிரடி

தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை தற்காலிகமாக  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த். 
இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான்
 அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : மு.க.ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கும் விழா
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

கொழும்பில் இன்று ஒரு வழி போக்குவரத்து ஒத்திகை

மருதானை பாலம் சந்தி தொடக்கம் தொழில்நுட்பக் கல்லூரி வரை, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம்

முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேய் விரட்ட வந்த யுவதியை நிர்வாணமாக்கி பல நாட்களாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட முன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் கைது

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.

கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று
அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என
சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு பொதுபல சேனா இயக்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர் ஆரூடம்
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி
சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

வாலிபர் எரித்து கொலை! தளி-யில் மீண்டும் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் அருகாமையில் பைரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை அருகாமையில் 35 வயது உள்ள வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர். 

நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா வீட்டு முன் போராட்டம்
தேனியில் உள்ள என்.ஆர்.டி நகரில் உள்ளது இயக்குனர் பாரதிராஜாவின் வீடு. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில்,

அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
 




முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் - வஞ்சனையின் உச்சகட்டம்: ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
வடமேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டோம் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்தத்தினால்
பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.வடக்கு தமிழ் மக்களுக்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு
வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, ...
முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்கட்சிக்கும்தமிழ்தேசியகூட்டமைப்புக்கும்இடையிலமுக்கியமானகலந்துரையாடலொன்று நேற்று இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.



பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது "பெண் வன்கொடுமை' தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட... அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை கைது செய்து ரிமாண்டும் செய்துவிட்டனர் கிண்டி மகளிர் போலீசார்.

தன்னுடைய "டிரேட்' மார்க் சிரிப்பை தொலைத்து கோபக்கனலுடன் உமா புகார் தரும்படி என்னதான் நடந்தது? தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசினோம்.

""சமீபகாலமாகவே சரவணராஜன் நடத்தி வருகிற "ஆல்பம்' புரோகிராமை தலைமை விரும்பவில்லை. பல முறை மறைமுகமாக இதை நிறுத்தும்படி சரவணராஜனிடம் சொல்லிப் பார்த்துள்ளனர். அவர் கேட்பதாகத் தெரியவில்லை. மேலும் ஜோதிடம் உள்ளிட்ட சில "ஸ்லாட்'கள் இப்போதைக்கு தேவையில்லை என்று காலி செய்த ரபிபெர்னார்ட்தான் இதையும் செய்கிறார் என்று அவரிடமே வம்புக்குப் போயிருக்கிறார் சரவணராஜன். தலைமை நிருபராக இருந்து கடந்த 23-ந்தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட ரமணி பற்றியும், சரவணராஜன் பற்றியும் "என்னை மதிப்பதில்லை' என்று ரபி, கம்ப்ளைண்ட் செய்திருந்தாராம். இப்படி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நிலையில்தான் சரவணராஜனிடம், அடுத்த புரோகிராம் பற்றி வம்படியாக தொடர்ந்து பெப்சி உமா நச்சரிப்பு செய்து கொண்டிருந்தார். இதனால் வெறுப்பான சரவணராஜன் தன் அறைக்கு அவரை வரவழைத்து திட்டிய தோடு, ஓப்பனாகவும் பொதுவில் திட்ட ஆரம்பித்துவிட்டார். எஸ்.எம்.எஸ். மூலமும் ஏடாகூட மாய் திட்டிவிட்டார். அதுதான் உமா கொடுத்த வன்கொடுமை புகாருக்கு ஆதாரமான எஸ்.எம். எஸ். ஆக மாறிவிட்டது'' என்கின்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ""ஆதம்பாக்கம் அட்ரஸ்லயிருக்கற சரவண ராஜனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டு காட்டணும்னு மட்டும்தான் எங்களுக்குத் தகவல். யாரு புகார் கொடுத்தாங்க, என்ன நடந்ததுங்கறது எதுவுமே தெரியாது. எல்லாமே ஆகாய மார்க்கமா டிராவல் பண்ண மாதிரிதான்.... கிண்டி ஆல் வுமன் போலீசுக்கு மட்டுமில்ல, அங்க கோர்ட் டியூட்டி பார்க் கற போலீசுக்குக் கூட இதப்பத்தி தகவல் ஏதும் தெரியாது... ஹை-லெவல் டீலிங் சார்'' என்றனர். ஆல்வுமன் மற்றும் கோர்ட் டியூட்டி போலீசாரிட மும் பேசினோம். அவர்களும் இதையேதான் ஒப்பித்தார்கள்.

""எக்ஸ் மாணவரணி மாநிலச் செயலாளரும் எம்.பி. வேட்பாளரா இருந்து காலி செய்யப்பட்டவருமான சரவணப் பெருமாளுக்கும், தலைமை நிருபர் ரமணிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. ரமணியும் சரவணராஜனும் ரொம்ப க்ளோஸ். இப்படி பல "யு' டர்ன் விவகாரங்களும் இப்ப நிர்வாகத்துக்கு பவர்ல வந்திருக்கிற சசி குரூப்புக்கு தெரிய வரவேதான் அவங்க ஜெ.கிட்ட சொல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திட்டாங்க. ஏற்கனவே ஜெ. கலந்துகிட்ட டெல்லி புரோகிராமை "அவுட் ஆஃப் ஃபோகஸ்'சா காட்டியும் திருச்சி பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டு விட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. ஆக எல்லாமும் மொத்தமா சேர்ந்துட்டது தான் இப்படியான ரிசல்ட்டாயிடுச்சு'' என்கின்றனர் நம்மிடம் பேசிய ஜெயா டி.வி.யில் உள்ள சிலரே...


பெப்சி உமாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தும், தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் என்னை திட்டியும், விமர்சனம் செய்தும்

ad

ad