புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை
காட்ட முனைகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
கல்முனை அபிவிருத்தி பெருவிழா கடந்த சனிக்கழமை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற போது அவ் அபிவிருத்தி பெருவிழாவில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் அக்கரைப்பற்றில் இடம்பெறும் அபிவிருத்திகள் போன்று கல்முனையிலும் நடைபெறவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அக்கரைப்பற்றில் அபிவிருத்திகள் நடைபெற வேண்டும் என்று அழுதிருக்கிறோம். ஏனென்றால், அபிவிருத்தியைத் தவிர மற்றைய எல்லாவற்றிலும் உடுத்திருந்த ஆடைகளை நொய்ய விட்டுவிட்டு அங்கு இருக்கின்ற அரசியல்வாதி இன்னும் சொல்லப் போனால் ஒரு விபசாரத்தைவிட மோசமான வேலைதான் அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம்மவர்கள் சொல்வார்கள் உம்மாவுடன் போகப் போகிறாயா? ஓம் ஓம் வாப்பாவுடன் போகப்போகிறாயா? ஓம் ஓம் இப்படி அபிவிருத்திக்காக இந்த சமூகத்தை துண்டு துண்டாக வெட்டியளித்துத்தான் அல்லது முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டாலும் முஸ்லிம்களுடைய பள்ளி உடைக்கபட்டாலும் அவர்களுயை மதச் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு எடுக்கின்ற அரசியல் அபிவிருத்தித்தான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கின்ற அபிவிருத்தி. இது தேவையில்லை.
அப்படி அக்கரைப்பற்றிலே நடக்கின்ற அபிவிருத்தி கல்முனை மண்ணுக்கும் வேண்டும் என்று தயவு செய்து நமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யாரும் நினைத்துவிடாதீர்கள். இன்றிருக்கின்ற அரசியல் சூழ்நிலை என்பது வேறு, அக்கரைப்பற்றில் இருக்கின்ற அரசியல் தலைமகனுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பாக திவிநெகும, பிரதம நீதியரசர் விடயம், பொது பலசேனா பிரச்சினை என்று பல வந்தபோதும் ஆதரித்தார். இப்போது 13 ஆவது திருத்தம் வந்தபோதும் ஆதரித்தார்.இந்த முஸ்லிம்களுக்கு விரோதமாக போகின்ற போக்கு இந்த அரசியல் ஊடாக தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் போராட்டத்தினுடைய வழி முறைகள் நோக்கங்களை இலட்சியங்களை மாற்றும்.
அக்கரைப்பற்றில் உள்ள அரசியல்வாதிக்கு இதைப்பற்றி பிரச்சினை இல்லை. இலங்கைக்கு உள்ளே நடக்கின்ற அரசியல் பற்றியும் பொதுபலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள்? இராவணா பலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள். இதனுடைய பின்னணி என்ன? இதனுடைய நோக்கம் என்ன என்பது பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை. இலங்கையை சுற்றி நடக்கின்ற புவியியல்சார் அரசியலில் இந்தியா என்ன காய் நகர்த்துகிறது. சீனா என்ன காய் நகர்த்துகிறது. இதனை மேலாட அமெரிக்கா என்ன யோசனை செய்கிறது என்பது பற்றியும் அரசாங்கத்திற்குள்ளே உள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரைக்கும் இனத்தை வைத்துத்தான் தன்னுடைய தீர்மானத்தை எடுக்க முடியும். சீனா இலங்கையிலே அளவுக்கு அதிகமாக ஈடுபாடு கொண்டிருக்கின்றது என்கின்ற காரணத்தினால் இப்போது அமெரிக்கா சீனாவை இந்த நாட்டிலே கையை விட்டு இழுத்து விட வேண்டும் என்பதற்காக சீனாவினுடைய துறைமுகங்கள் இலங்கையிலும் ஏனைய இரண்டு நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இதனூடாக இலங்கையில் சீனாவினுடைய இறுக்கம் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கின்றபோது அது எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை பாதிக்கப்போகின்றது என்பதனை முஸ்லிம் சமூகத்தினுடைய தலைமைகள் யோசிக்கவேண்டும். அதாவுல்லா, ரிஷாட் போன்றோர் யோசிக்க வேண்டியதில்லை. ஏன் அமைச்சரவையில் இருக்கின்ற இப்போது இனவாதம் பேசுகின்ற அமைச்சர்கள் ஏதாவதொரு இடத்தில் செவியேற
பேசுகின்ற பேச்சுகளை பிரித்துப் பார்க்கவேண்டிய தேவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கிறது.
பொதுபல சேனாவுடைய ஒவ்வொரு நகர்விலும் இதற்கு பின் யார் இருக்கின்றார்கள். இதனுடைய நோக்கம் என்ன என்பதனைப்பற்றி தீர விசாரித்துப் பார்க்க வேண்டியது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத்தான் இருக்கிறது. அதனூடாகத்தான் முஸ்லிம் சமூகத்தை ஸ்தீரமாக வைத்திருக்க முடியும். பொது பலசேனாவுக்கு எதிராக ஏன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மெளனம் காக்கின்றது என்று கேட்டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆரம்பத்தில் களமிறங்கியிருந்தால் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் பேசுகின்றபோது சிங்களவர்கள் எல்லோரும் சிங்கள பெளத்தவாதம் கடும் போக்குவாதிகளோடு இணைந்திருப்பார்கள். அப்போது அது முஸ்லிம், தமிழ், சிங்கள கலவரமாக மாறியிருக்கும். ஆகவே, முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற அளவிற்கு சிங்கள தலைமைகள் தயாராகின்ற சூழ் நிலையை பார்த்துக்கொண்டிருந்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை.
அதற்கு பிறகு சிங்கள சமூகத்தில் இருந்த இடதுசாரிகள் கதைக்கத் தொடங்கினார்கள். மென் போக்குவாதிகள் கதைக்கத் தொடங்கினார்கள். அப்படி முஸ்லிம்களுக்காக சிங்கள தலைமைகள் பேச ஆரம்பிக்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அதனை தன்னுடைய பலமாக ஸ்திரப்பயன்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தது.
பொதுபல சேனா முதுகுமுள் முறிந்து உடைந்ததைப் போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்க வேண்டும்.
அதுமாத்திரமல்ல, 13 ஆவது ஷரத்தினுடைய திருத்தங்கள் தொடர்பாக இப்போது பேசப்படுகிறது. சிறுபான்மையினங்களுடைய தலைவர்களாக அமைச்சர்களாக அரசாங்கத்திற்குள்ளே இருப்பவர்கள் 5 பேர் தான்.
ஆனால், ஒரே ஒரு முஸ்லிம் சிறுபான்மையினத்தினுடைய தலைவர் அதாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் மாத்திரம் தான் 13 ஆவது ஷரத்தில் கைவைக்க விடமாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார்.
அதாவுல்லா ஒட்டு மொத்தத்தில் 13யை ஒழித்துவிட வேண்டும் என்று சொன்னார். ரிஷாட் ஊமையாக இருந்தார். டக்ளஸ் வராமல் விட்டார். ஆறுமுகம் தொண்டமான் இருந்ததும் தெரியாது, இல்லாததும் தெரியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைதான் சிறுபான்மைக்காக பேசியது. முஸ்லிம் காங்கிரஸ் பேசாது விட்டிருந்தால் இடது சாரிகள் என்று கூறுபவர்கள் டியூ குணசேகர, திஸ்ஸ விதாரன, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் தைரியமாக தனித்து நின்று பேசியிருக்கமாட்டார்கள். ராஜித பேசியிருக்கமாட்டார். ஆனால், இது சிறு பான்மைக்கு செய்கின்ற அநீதி என்பதனை பேசியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும். அவர்கள் எல்லோருமே களமிறங்கினார்கள் நமது தலைமைக்கு பக்கபலம் சேர்க்கின்ற அளவிற்கு பேசினார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் வரை அல்ல, வெளியிருக்கும் வரை இருக்க வேண்டும். வெளியிறங்கி வந்து முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசுகின்ற போது எங்களை தூக்கி எறிந்தார்கள் என்று சொல்லும் வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்க வேண்டும்.
இவ்வாறு இதற்கான காரணங்களை ஏற்கெனவே கூறிவந்தேன். அதற்கு என்னை விமர்சித்தார்கள். அல்லாஹ்வின் உதவியால் அதில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் அதே அமைச்சரவையில் நமது தலைவர் இருந்தமையால் தான் 13ஆவது ஷரத்தை எதிர்த்து பேசமுடிந்தது. இப்படி சரியான நேரம் பார்த்து காலம் பார்த்து தீர்மானம் எடுக்கின்ற அதற்காக பேசுகின்ற அமைப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. சிலர் பேசுகிறார்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் முஸ்லிம்களுடைய அதிக பெரும்பான்மையோடு பாராளுமன்றத்தில் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றது என்கின்ற செய்தி ஒன்றே போதும் இக் கட்சியின் இருப்பு மாத்திரமே போதும் வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

ad

ad