புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  
ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு விவரம்:  2001 சட்டமன்ற தேர்தலில் புவனகிரி, ஆண்டிப்பட்டி உள்பட 4 தொகுதிகளில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்வது சட்டப்படி குற்றமாகும். 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை எதிர்த்து திமுக குப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். குப்புசாமி மனுவை ஏற்று ஜெ.மீது கிரிமினல் வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஐகோர்ட் அனுமதியை அடுத்து ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. தேர்தல்  வழக்குகளை ரத்து செய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டை ஜெயலலிதா அணுகியிருந்தார்.

ad

ad