நான் வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை: டி.யு.குணசேகர
பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நீதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டி.யு.குணசேகர, நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம், அரசியல் அமைப்பு, பாராளுமன்றம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்
இதனால் குற்றப் பிரேரணை விடயத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்ற அடிப்படையில் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் டி.யு.குணசேகர குறிப்பிட்டுள்ளார் .