புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 16ம் திகதி கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டிருந்தது.
காணாமல் போனவர் கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி - சரோஜா என்பவராவார்.
இவர் சிவில் பாதுகாப்புப் படைப் பணியாளராவர் (சீ.எஸ்.டி). இவர் வட்டக்கச்சிப் பண்ணைக்கு சீ.எஸ்.டி. வேலைக்காகச் சென்ற சமயமே காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி மாங்குளம் பனிக்கன்குளம் என்னும் இடத்திலுள்ள ஆட்களற்ற வீட்டுக் கிணற்றுக்குள்ளிருந்து அம்மிக் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் மேற்படி சடலத்தை தமது மகள் என இனங்காட்டியுள்ளதை அடுத்து விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் மேற்படி சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த யுவதியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்களால் கூறப்படுகின்ற போதிலும் தற்போது உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
விசாரணைகள் முழுமையாக்கப்பட்டதன் பின்னர்தான் உண்மை நிலை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad