சவூதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பு
சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதற்கு முன்னர் சென்னையில் இலங்கை உதவி உயர்ஸ்தானிகராக பணியாற்றி வந்தார்.
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மீளழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்
அசீஸ் அப்துல் ரஹ்மானும், மீண்டும் கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்கு திரும்பியுள்ளார்.
அசீஸ் அப்துல் ரஹ்மானும், மீண்டும் கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்கு திரும்பியுள்ளார்.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் 1.5 மில்லியன் இலங்கையர்களில், 5 லட்சம் பேர் சவூதி அரேபியாவில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் சவூதிக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.