புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் பிரதீப் மகாநாமஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்பொருட்டு, சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கைக்கு சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களை சரிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் பிரதிப மகாநாமஹேவா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலி ஆதவு புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஆணையாளர், அவர்களை சென்று வலியுறுத்தக் கூடிய சில புலம்பெயர்ந்த அமைப்பினர் தமதுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.
மத்தியஸ்தம் வகிக்கும் புலம்பெயர்ந்தவர்களையும் எமது பக்கம் திசைதிருப்பிக் கொள்ள முடியும்.
பாலஸ்தீன, ஈராக், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமான முறையில் ஆதரவினை வழங்குவதாக பிரதிப மகாநாமஹேவா சுட்டிக்காட்டினார்.
அவர்களுடன் நெருக்கமான உறவுகளை பேணும் போது மேலைநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ad

ad