புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

அதிமுக பிரமுகர் படுகொலை: சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. விசாரணை: சேரன்மகாதேவியில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன் சேர்மேனாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கீதா. இவரது கணவர் அருணாச்சலம் என்ற குமார்பாண்டியன் அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. தனது
ஊரான கூனியூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அன்றாடம் தனது அலுவலை முடித்துவிட்டு இரவு 9 மணி வாக்கில் அலுவலகத்தில் இருந்து பக்கத்தில் உள்ள வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

வழக்கம்போல வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் தனது அலுவலத்தில் இருந்து தனது டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டிற்கு சரியாக சில அடி தொலைவில் வந்துகொண்டிருந்தவரை, வழி மறித்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. அதில் சம்பவ இடத்திலேயே குமார்பாண்டியன் உயிரிழந்தார். 
இந்த தகவல் அறிந்தவுடன் சேரன்மகாதேவி காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிடாரி சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். படுகொலை சம்பவத்தையடுத்து பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சம்பவம் நடந்த இடத்தின் அருகே இரண்டு டூவீலர்கள் அனாதையாக கிடந்ததை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொழில் போட்டியா அல்லது முன் பகை காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட குமார்பாண்டியனுக்கு, கீதா என்ற மனைவியும், ஆண், பெண் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

ad

ad