"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை"
வட மாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளகட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனைமதிப்பீடு செய்வதற்காக நான் இலங்கை வரவில்லை.
உள்நாட்டில் மனித உரிமைகளின் தற் போதையநிலைவரத்தை மதிப்பீடு செய்வதே இலங்கைக்கான எனதுபயணத்தின் நோக்கமும் கடமையும் ஆகும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியுள்ளார்.
யாழ்.நூலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (27.08.13)காலை சென்ற ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தைபார்வையிட்டதுடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிமற்றும் பிரதி செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோரின்
தலைமையில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டசெயலாளர்கள் வடக்கில் மேற் கொள்ளப்பட்டுள்ளஅபிவிருத்தி பணிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்குவிளக்கமளித்தார்கள்.
இதன் போது உரையாற்றுகையிலேயே மனித உரிமைகள்ஆணையாளர் நவநீதம்பிள்ளை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் அங்கு உரைஆற்றிய அவர்
இலங்கையின் வடபகுதிகளில் பல்வேறு அபிவிருத்திபணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையை உங்களின்விளக்கமளிப்புகளூடாக அறிந்து கொள்கின்றேன். குறிப்பாகஐ.நா. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள்மேம்பாட்டுத் திட்டங்களையும் ஐ. நா. கொள்கைகளையும்ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்தொடர்பிலான நடவடிக்கைகளும் மகிழ்ச்சியளிக்கின்றது.
எனினும் “இலங்கைக்கான எனது பயணத்தின் நோக்கம்வடக்கின் அபிவிருத்திகளை மதிப்பீடு செய்வதில்லை.இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தைமுழுமையாக மதிப்பீடு செய்வதும் குறிப்பிட்ட சிலதரப்புக்களையும் பொது மக்களையும் சந்தித்து உண்மைநிலைவரத்தை கண்டறிய வேண்டியதும் எனது கடமையாகும்”எனக் கூறியுள்ளார்.