புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக உறவுகளை தூண்டுங்கள்: புலம்பெயர் மக்களுக்கு மாவை அறைகூவல்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“வட மாகாணசபைத் தேர்தலும் புலம்பெயர் மக்களின் நிலைப்பாடும்” எனும் தொனிப்பொருளில் சுவிஸில் இடம்பெற்றிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றிலேயே காணொளிப் பரிவர்த்தனையூடாக இவ்வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
தாயகத்தில் உள்ள உறவுகளை தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு அவர்களை தூண்டுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணொளிப் பதிவின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களது கருத்தும் இந்நிகழ்வில் பகிரப்பட்டது.
நிறைவாக மக்களின் கருத்துக்களை உள்வாங்கியதாக கேள்வி பதில்களும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்றிருந்தது.

ad

ad