புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

பாஜக செயல்படும் விதம் வேதனையளிக்கிறது: ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி கடிதம்
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாஜக செயல்படும் விதம் குறித்து, தமது வேதனையை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக
கூறியுள்ளார். ஆட்சி மன்றக் கூட்டத்தில் தான் பங்கேற்பதில் தர்மசங்கடம் உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததே சிறந்த முடிவாக இருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார். 
பிரதமர் பதவி வேட்பாளர் அறிவிப்பு குறித்து 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கலாம் என்று அத்வானி கூறிவந்தார். இந்தநிலையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளவில்லை. மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் இந்த கூட்டத்தல் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் அத்வானி தனது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டியுள்ளார் என்றும் டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

ad

ad