புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜ்குமார் மீது ஜனாதிபதியின் அடியாட்கள் தாக்குதல்!
மத்திய மாகாண சபை தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் மீது மஸ்கெலியா நகரப்குதி ஜனாதிபதியின் ஆளென தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முரளி ரகுநாதன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான ராஜ்குமார் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முரளி ரகுநாதன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அரச பங்காளிக் கட்சிகளாலும், ஜனாதிபதியின் எடுபிடிகளாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்த வண்ணமாய் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா தெரிவித்தார்.

ad

ad