புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photos
மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டிகள் பலத்த பாதுகாப்போடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும் சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாணம்
கண்டி 58%
மாத்தளை 54%
நுவரெலியா 54.5%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60 %
குருநாகல் 55%
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவரது பிறந்த மண்ணான வட்டக்கச்சி மாயவனூரில் தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவரது பிறந்த மண்ணான வட்டக்கச்சி மாயவனூரில் தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார். 
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களிற்கு தமது துணைவியார்களுடன்  சென்று வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad