இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த
விக்ரம் உடலுக்கு அஞ்சலி
இலங்கையை கண்டித்து சென்னை நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த விக்ரம் என்பவர் இலங்கை அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பிக்கொண்டே தீக்குளித்துள்ளார், இதையடுத்து உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்