புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


விமானம் மீது மின்னல் தாக்குதல்: உயிர் தப்பிய கால்பந்து வீரர்கள் 
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இன்றிரவு இத்தாலி-பிரேசில் நாட்டு அணிகளுக்கு இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஜெனீவா விமான நிலையத்தில் இன்று காலை இத்தாலி வீரர்கள் வந்த விமானம் தரையிறங்கும்போது, கடுமையான மின்னல் தாக்கியது. இதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் இத்தாலி வீரர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள். 
விமானத்துக்கும் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்த மின்னல் தாக்கியபோது அந்த விமானம் குலுங்கியதை பயணிகள் உணர்ந்தனர் என்றும் விமானநிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad