புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014


மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 74 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 


அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 74 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 18 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட 74 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி 25-ம் தேதி இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ad

ad