புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார். 

யாழ்.மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மீது இன்று காலை இனந்தெரியாத விசமிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இதற்கு கழிவு ஓயில் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அறைக் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சமாதானத்தை குழப்பிக் கொள்வதற்கு தோன்றிய  கலாச்சாரம் இந்த ஓயில் கலாச்சாரம். இந்த துன்பியல் செயற்பாடு மிகவும் வேதனையளிக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து இங்கு வருகின்ற பணப்பாச்சலே காரணம். எனவே நாம் அடிமைகளாக இருக்க கூடாது. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

ad

ad