தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும். அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;
பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.