புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014


இலங்கை, இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இந்திய பிரதிநிதிகள் நாளை கொழும்பு வருகை

* திங்களன்று முக்கிய விடயங்கள் ஆராய்வு,
* இலங்கை தரப்பில் 20 பிரதிநிதிகள்; 10 அதிகாரிகள்

* இந்திய சார்பில் 18 பிரதிநிதிகள் ; 08 அதிகாரிகள் பங்கேற்பர்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் நாளை கொழும்பை வந்தடைய உள்ளனர்.நாளை மறுதினம் நடைபெற உள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 18 மீனவர் சங்க பிரதிநிதி களும் 8 அதிகாரிகளும் பங்குபற்றுகின்றனர்.
இலங்கைத் தரப்பில் 20 மீனவர் சங்க பிரதிநிதிகளும் 10 அதிகாரிகளும் பங்குபற்றுவதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு கூறியது.
இலங்கை - இந்திய மீனவர் சங்கங்களுக்கிடையிலான முதற் சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்றது. இதில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதோடு அவற்றில் பல உடன்பாடு களை இந்திய தரப்பு மீனவர்கள் மீறியிருந்தனர். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 13 ஆம் திகதி நடைபெற ஏற்பாடா கியிருந்த போதும் தமிழ் நாட்டு முதல மைச்சர் ஜெயலலிதா வின் நிபந்தனைகளி னால் பேச்சுவார்த் தைகள் தடைப்பட்ட தாக அமைச்சு குறிப்பிட்டது. மீன்பிடி அமைச்சின் கோரிக்கையை அடுத்து பேச்சுவார்த்தைகளை மார்ச் 12 அல்லது 13 ஆம் திகதி நடத்த முடியும் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி, 12 ஆம் திகதி பேச்சுக்கு திகதி குறிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த பேச்சுவார்த் தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மீறப்பட்டது குறித்தும் அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றியும் 2ம் கட்ட பேச்சில் ஆராயப்பட உள்ளது.
இலங்கை சார்பில் யாழ்., மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருமலை, புத்தளம் மாவட்ட மீன்பிடி சங்க பிரதிநிதிகள் 20 பேர் பங்குபற்றுகின்றனர்.
மீனவர் சங்க பிரதிநிதிகள் நேருக்கு நேர் பேச்சுநடத்த உள்ளதோடு அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக செயற்பட உள்ளனர்.
இதேவேளை, இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தாம் இணங்கப் போவதில்லை எனவும் தமிழ்நாடு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன் பிடிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தமது தரப்பு உறுதியாக இருக்கும் எனவும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட பேச்சின் உடன்பாட்டின் பின் இலங்கை கடற்பரப்பில் சட்டவி ரோதமாக மீன்பிடித்த பல இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியின் வேண்டுகோளையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 2 ம் கட்ட பேச்சு கொழும்பு சின்சி வீதியிலுள்ள செடக் நிறுவனத்தில் நடைபெறும்.

ad

ad