புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014




70 வருடங்களாக  தமிழனை அழித்த  சிங்களம் இப்போது  முஸ்லிம் தமிழரையா ?அழுத்கமவில் முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீவைத்த பிக்குகள்
அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்த வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான மொகமட் நயீம்கான்,இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, வர்த்தக நிலையத்துக்குள் எடுக்கப்பட்ட எல்லா காணொளிப் பதிவுகளும் ஆராயப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விகாரை ஒன்றில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் கேட்கப்பட்டதாக தாம் அறிந்ததாகவும் மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார்.
8ம் திகதி மாலை 5. 00 மணிக்கு வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று அதிகாலையிலேயே தீவைப்பு இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மூன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற சுமார் 250 தொடக்கம் 300 பேர் வரை, இந்த வர்த்தக நிலையத்துக்கு தீவைத்து எரித்துள்ளனர். இதனால் இரண்டு மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்தார்.

ad

ad