புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014


கே.பி.யை கொலை செய்ய புலிகள் முயற்சி-புலனாய்வுப் பிரவினர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாளராகவிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கொலை செய்ய புலிகள் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கே.பி உள்ளிட்ட நான்கு முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரவினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவரிசையில், ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் ஆகியோரை கொலை செய்ய புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் புலிப் போராளி ஒருவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவர்களை படுகொலை செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு காணப்படும் தமிழ் ஆதரவினைச் சீர்குலைக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரவினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad