புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

இலங்கை அகதிகள் முகாமில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த
மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாக குழுவினரால் மூன்றாம் ஆண்டு கல்விபரிசளிப்பு மிகச்சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்கள்  அளவிலான மாணவர்களில் இவ்வாண்டு 10மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப்பிடித்து சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் நடந்தது விழாவிற்கு முகாம் தலைவர் ச.கமலநாதன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் செ.மனோகரன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பேசியது.அனைத்து முகாம்களில் உள்ள மாணவர்களை கொளரவிக்க  வேண்டும் என்ற நல்நோக்கத்தில் இப்படி வி

ழாக்ககளை ஏற்பாடுகளை செய்துள்ள நிர்வாக குழுவையும் இம்முகாம் மக்களையும் நான் மனதார பாராட்டுகிறேன் மேலும் 10ம்வகுப்பில் முதல் இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகள் 12ம்வகுப்பிலும் அதிகமதிப்பெண்கள் பெறவேண்டும் அதேபோல் 12ம்வகுப்பில் அதிகமதிப்பெண் பெற்றவர்கள் கல்லூரி அளவிலும் நல்லதேர்ச்சி சதவீதம் அடையவேண்டும் என்றார்.

விழாவில் ஸ்ரீபாரதி கல்வி  நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் திருவரங்குளம் ஊராட்சி ஓன்றியக்குழுத்தலைவர்  துரைதனசேகரன் துணைத்தலைவர் டி.பழனிச்சாமி ஆலங்குடி வட்டாச்சியர்  எம்.வெங்கடாசலம் திருவரங்குளம் ஓன்றியக்குழு உறுப்பினர் ரெ.ஆறுமுகம் திருவரங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.கருப்பையா கைக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சுப.செல்வராஜ் அகதிகள் நலன் வட்டாச்சியர் மூர்த்தி அகதிகள் நலன்  முன்னால் வட்டாச்சியர் சாமித்தேவர் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் 10ம்வகுப்பில் 493மதிப்பெண்கள் பெற்ற பவானிசாகர் முகாமைச்சேர்ந்த ஷாலினிபிரபா 491மதிப்பெண் பெற்ற ஓக்கூர் முகாமைச்சேர்ந்த எஸ்.மேரிமதுஷா 487மதிப்பெண்கள் பெற்ற கிருபாலினி பிரதீப்மஹேலா 12ம்வகுப்பில் 1170மதிப்பெண் பெற்ற அரச்சலூர் முகாமைச்சேர்ந்த ரா.நந்தினி 1136 மதிப்பெண் பெற்ற கெலவரப்பள்ளி முகாமைச்சேர்ந்த டி.சுலக்ஸன் அதே முகாமைச்சேர்ந்த 1103 மதிப்பெண் பெற்ற சர்மிளா ஆகியோர்க்கு கேடயங்கள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் வருவாய்த்துறை காவல்துறை கியூபிரிவு அதிகாரிகள் மருத்துவர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக பொருளாளர் அ.வரதராஜன் துணைத்தலைவர் எம்.விஜயராஜா துணைச்செயலர் எம்.அருட்சிங்கம் ஆலோசகர் இம்மானுவேல் உறுப்பினர்கள் செய்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக ஷோபா மகேந்திரன் வரவேற்றார் முடிவில் குழுச்செயலாளர் எஸ்.ஜெயசீலன்குரூஸ் நன்றி கூறினார் .

ad

ad