புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

பிரபாகரனை கிண்டலடித்தே சந்திரிகா உரையாற்றினார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கிண்டலடிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரபாகரனின் பெயரினை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தியுள்ளார்.

அதனை மக்கள் தவறாக புரிந்து கொண்டு கைதட்டியுள்ளனர் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மதியம் நடை பெற்றது. இதில் உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமாதான தேசத்தின் தந்தையினை உங்களிடம் அழைத்து வந்துள்ளேன். தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக எதிரணியும் ஆதரவாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

மைத்திரிபால தான் ஒன்றும் வெளியே கதைப்பதில்லை என கூறுகின்றார். ஆனால் இதே கட்சியில் இருக்கும் போது என்னை புகழ்ந்து பேசியுள்ளார் என்றார்.

இதேவேளை அண்மையில் பொது எதிரணியினரின் தேர்தல் பிரசாரத்திற்காக யாழ் வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் எனக்கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad