புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

டெல்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாறாக நீத்தி ஆயோக் எனப்படும் புதிய அமைப்பை ஏற்படுத்தப்பட்டது. 

இந்த அமைப்பிற்கான மாநில முதல் அமைச்சர்கள் கூட்டம், டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

இதில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை மாலை டெல்லி சென்றார். தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர். 

ad

ad