புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

பிரதமர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்க ஆலோசனை?


நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம்  கலைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிறந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக எதிர்வரும் காலத்தில் முன்னோக்கி நகர்த்துவதற்கு எந்த வித தடையும் இல்லை தேவை இருப்பின் பிரதமர் பதவியை மாத்திரம் மாற்றலாம் எனவும் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய தமது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் பிரதமர் பதவியை ஜனாதிபதியின் விருப்பத்தின் படி தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அல்லது வேறு ஒருவருக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்க தீர்மானித்துள்ளனர்.

ad

ad