புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போடாது வெளியிடவேண்டும் ஜெனீவா அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்டு வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபை­யி­னு­டைய விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் சந்­திரா பெய்ட்ஸ் உட்­பட அச்சபையின் உயர் அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­திரன் எந்தக் கார­ணத்­திற்­கா­கவும் ஐ.நா. விசா­ரணை அறிக்­கையை வெளியி­டு­வ­தற்கு தாமதம் செய்ய வேண்டாம் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஜெனீவா சென்­றுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் நேற்று வௌ்ளிக்­கி­ழமை ஐ.நா மனித உரிமை சபையின் இலங்கை தொடர்­பான விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களை சந்­தித்­தி­ருந்தார். சுமார் ஒன்­றரை மணி­நேரம் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
குறித்த சந்­திப்பு தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில்,
ஐக்­கிய நா டுகள் விசா­ரணை அறிக்­கையை தாமதம் செய்­யாது ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­ததன் பிர­காரம் அதனை வௌியி­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஐ. நா மனித உரி­மைகள் சபை ஆணை­யாளர் சீட் ராட் அல் ுஹசை­னுக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார். இந்த கடி­தத்தை மையப்­ப­டுத்­தியே குறித்த சந்­திப்பு இடம்­பெற்­றது.

குறிப்­பாக, இந்த அறிக்­கையை வௌியி­டாது தாமதம் செய்­வ­தனால் ஏற்­ப­ப­டக்­கூ­டிய விளை­வு­களை இந்த சந்­திப்பில் எடுத்­து­ரைத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. கால­தா­மதம் செய்­வது அறிக்­கையின் முக்­கி­யத்­து­வத்தை அற்­றுப்­போகச் செய்­து­விடும் செய்­து­விடும் என்­ப­தையும் எடுத்­துக்­கூ­றினேன்.
தமது கருத்­துக்­களை ஆழ­மாக அவர்கள் செவி­ம­டுத்­தி­ருந்­தனர். விசா­ரணை அறிக்­கையை வௌியி­டு­வது தொடர்­பான தீர்மானத்தில் மனித உரிமைகள் சபையின் உறுப்புநாடுகளின் செல்வாக்கு முக்கியமானது என்பதால், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad