புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2015

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் திடீர் தற்கொலை


முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனைவி உமா மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது கே.பி.பி.சாமி தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளராக உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்றிருக்கிறார்.

வீட்டில் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் (28), அவரது மனைவி பிரசன்யா (23), மகள் இனியா (1) ஆகியோர் இருந்தனர். நேற்று இரவு இனியவன் மாடியில் தூங்க சென்றார்.

பிரசன்யா, குழந்தையுடன் வீட்டின் கீழ் பகுதியில் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இனியவன் கீழே வரவில்லை. எனவே பிரசன்யா மாடிக்கு சென்று பார்த்தார். அறை கதவை தட்டினால் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது கணவர் இனியவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதை கண்ட பிரசன்யா கதறி துடித்தார்.

உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு அங்கு சென்று பிணத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இனியவன் தற்கொலை குறித்து கே.பி.பி.சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை திரும்பினார்.

கே.பி.பி.சாமியின் மகள் உதயா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இன்னொரு மகன் உள்ளார். அவரது பெயர் பரசுபிரபாகரன். உடல்நிலை சரியில்லாததால் இனியவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேறு காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad