தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய தலைமன்னார் பியர் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் வந்தடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சற்றுநேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.