புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

தோல்விக்கு நானே காரணம்: கண்ணீர் வடிக்கும் டிவில்லியர்ஸ்

நியூசிலாந்து அணியுடான தோல்விக்கு நானே காரணம் என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பி, எங்கள் நாட்டு கிரிக்கெட் இதயங்களை மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் வாய்ப்பு இருந்தும் அதை செய்ய தவறி விட்டோம். இதனால் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன்.
தோல்வியால் நாங்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம் என்பதை விவரிப்பது கடினம், வேதனையால் துடிக்கிறோம்.
முக்கியமான கட்டத்தில் கோரி ஆண்டர்சனை நான் ரன்–அவுட் செய்ய தவறியதும், ஆட்டத்தை இழப்பதற்கு முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மொத்தத்தில் சிறந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது, களத்தில் நாங்கள் எல்லா வகையிலும் போராட்டத்தை வெளிப்படுத்தினோம். வீரர்களிடம் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad