புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று

 தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றுநடைபெறவுள்ளது.


அதற்கு முன்னதாக அமைச்சரவையின் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்கான அமைச்சர்கள் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சரவை அமைச்சர்களுடன் மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களுக்கு இன்று அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ad

ad