ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்
பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர். நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கின.இதனால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.