புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

கருணா கோத்தபாயா செய்த கொலைகள் /முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம்,சந்திரநேரு சௌந்தரநாயகம்திருமலை நகரசபை முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன்நீலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரி நடேசன்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில செய்தி இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார்.
பின்னர் சட்டவிரோதமான மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார்.
பொலிஸ் அதிகாரியின் சட்டவிரோத மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம்; வரிசைப்படுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நீலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன்,
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன்,  மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு,
செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்டவிரோத மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என்று ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

ad

ad