புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை! ஊடகவியலாளர்கள் விஜயம்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார்.
மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.
மாளிகையின் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஏ.சி. வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.
மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தமிழ் ஊடக அதிகாரி ஆர்.எப். அஷ்ரப் அலீயும் இந்த ஊடகவியலாளர் குழுவில் ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் ஊடகவியலாளராக நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

ad

ad