புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 25ம்
தேதி கூடுகிறது. இதில் முந்தைய நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 18ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் விஷால் தலை மையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியிலிருந்து 4 பேர் மட்டுமே செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பிறகு முதல் செயற்குழுக் கூட்டம் வரும் 25ம் தேதி வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் நடக்கிறது. 

இதில் 24 செயற்குழு உறுப்பினர்களும் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துள்ளவற்றில் உடனடியாக நிறைவேற்றக்கூடிய திட்டங்கள்.  குறிப்பாக சங்கத்துக்குப் புதிய கட்டிடம் கட்டும் திட்டம், அதற்கு நிதி திரட்டுவதற்கான சாத்திய கூறுகள், சங்க கட்டிட நிதிக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, திரைப்படம் தயாரிப்பது. சங்க அறக்கட்டளைக்கு 9 நிர்வாகிகளை நியமித்தல், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை உயர்த்தி தருவது உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு விரைவில் பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெறுவது என்றும் முடிவு செய்கிறார்கள்.

ad

ad